Posts

Showing posts from 2025

மரப்பாச்சி பொம்மைகள்

Image
அண்மையில் தினமணி நாளிதழில் வெளியான (வி.என்.ராகவன், மீட்டெடுக்கப்படும் மரப்பாச்சி பொம்மைகள் , தினமணி, கொண்டாட்டம், 23 பிப்ரவரி 2025)  கட்டுரையைப் படித்ததும் என் சிறு வயது நினைவுகள் மனதிற்கு வந்தன. இந்தப் பொம்மைகள் அனைவரின் வீட்டிலேயும் அப்போது இருக்கும். அன்று பெரியவர்கள் இந்த பொம்மைகளைக் கொண்டு செய்த கைவைத்தியத்தை இன்றும் சில வீடுகளில் கடைபிடிக்கிறார்கள். குழந்தைகளுக்குச் சளியோ, காய்ச்சலோ வரும்போது இந்தப் பொம்மையை வைத்து பத்து போடுவதற்கு எங்கள் அப்பாயி, எங்கள் அம்மாவுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்.  பின்னர் எங்களுடைய பெரியக்கா, இந்த முறையைப் பயன்படுத்தியதோடு, இந்தப் பத்தினைத் தாய்ப்பாலிலும் கலந்து போடலாம் எனக் கூறியிருக்கிறார்கள்.  என் மாமியார் அந்தக்கலவையில் கொஞ்சம் மஞ்சள் தூள், சாம்பிராணி, ஊதுபத்தித்தூள் ஆகியவற்றை ஒரு கரண்டியில் போட்டு நல்ல விளக்கில் சூடேற்றி, அதைக் குழந்தைகளின் உச்சந்தலை, நெற்றி, மார்பில், உள்ளங்கால்களில் தேய்த்துவிடுவதைப் பார்த்துள்ளேன். எனக்கு என் மாமியார் இந்தக் கைவைத்தியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள். அவர்களைப் பின்பற்றி நான் என் மகன்களுக்கும...

பனை உறை தெய்வம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

Image
பனை உறை தெய்வம் எனும் இந்நூலை 25 கட்டுரைகளை மையமாக வைத்து  திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் ஐயா எழுதியிருக்கிறார்.  பனைமரம் என்றால் எனக்குத் தெரிந்தது நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம், பனை ஓலைக்கொட்டான், பனை விசிறி, பனை வெல்லம், பனங்கற்கண்டு, பதநீர்,  ஓலைச்சுவடி,  ஆகியவையாகும். இந்நூலின் மூலமாக பல அரிய செய்திகளை அறிந்தேன். மூலவர் திருமேனி, தல மரம், நீர் நிலை ஆகிய மூன்றும் சிவன் கோயில்களின் இன்றியமையா அங்கங்களாகும். இவற்றை மூர்த்தி, விருட்சம், தீர்த்தம் என வட மொழியில் குறிப்பர். கோயில்களை வழிபாட்டுத் தலங்களாக மட்டும்  கொள்ளாமல் அவற்றை மனித வாழ்வோடு இயைந்த சமுதாயக் கேந்திரங்களாகவும் போற்றும் நெறி தமிழகத்தில் அண்மைக் காலந்தொட்டு தொடர்ந்து வருவதாகும்.  சனகாதி முனிவர்களுக்கு கல்லால மரத்தின் கீழ் இருந்தவாறு பரமேஸ்வரன் ஞானமுரைத்தது, திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகருக்கு குருந்த மரத்தின்கீழ் இருந்தவாறு ஞானத்தை நவின்றது, திருவெற்றியூரில் சுந்தரரை மகிழ மரத்தின்கீழ் இருந்தவாறு சத்தியம் உரைக்கப் பணித்தது என்ற வகையில் மரங்கள் என்பவை தெய்வத்தோடு  தொடர்புடையவையாகும். ஒவ்...