Posts

Showing posts from 2016

பழுவூர் உலா : மேலப்பழுவூர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்

Image
அண்மையில் பழுவூரிலுள்ள கோயில்களுக்குச் சென்றிருந்தோம். அவற்றில் மேலப்பழுவூர் கோயிலைப் பற்றி இந்திரன் விமோசனம் பெற்ற திருத்தலம் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை இன்றைய தினமணி இதழில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையின் மேம்பட்ட வடிவினைப் பகிர்வதில் மகிழ்கிறேன். தினமணி இதழுக்கு நன்றி.  --------------------------------  மேலப்பழுவூர் தஞ்சாவூரிலிருந்து 35 கிமீ வடக்கில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் ஆன இக்கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது.   பழுவேட்டரையர்களின் தலைநகராக விளங்கிய இவ்வூர் மன்னு பெரும்பழுவூர் என்று அழைக்கப்படும் பெருமையை உடையது. சாபம் நீங்குவதற்காக இந்திரன் மதுரையில் தவம் செய்தபோது அசரீரி இந்த ஊருக்கு வரும்படி கூறியதால் இந்திரன் வந்து இத்தல இறைவனை வணங்கி சாப விமோட்சனம் பெற்றதாகக் கூறுகின்றனர். இத்தலம் ஜமதக்னி ரிஷி வழிபட்ட பெருமையுடையதென்றும், தாயைப் கொன்ற பரசுராமரின் பாவம் நீங்கிய வகையில் பரசுராமர் தீர்த்தம் பெற்ற தலமென்றும் கூறுகின்றனர். இக்கோயில் சாலையிலிருந்து கீழே பள்ளத்தில் இறங்கி செல்வது போன்ற நில

ஜாலம் காட்டும் ஜலகண்டேஸ்வரர் கோயில் : தினமணி

Image
இன்றைய (2 செப்டம்பர் 2016) நாளிட்ட தினமணியில் வெளியான கட்டுரையின் மேம்பட்ட வடிவத்தினைப் பகிர்வதில் மகிழ்கிறேன். எனது கட்டுரையை வெளியிட்ட தினமணி நாளிதழுக்கு நன்றி. வேலூர் என்றால் நமக்கு கோட்டையும் அதன் மதில்களும் நினைவுக்கு வரும். முன்பொரு முறை சுற்றுலா சென்றபோது கோட்டையின் மதிலை மட்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இரவு அதிக நேரமாகிவிட்டதால் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. அண்மையில் கோட்டையின் உள்ளே உள்ள கோயிலைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை என்ற பெருமை இக்கோட்டைக்குள்ளது. இக் கோட்டைக்குள் கோயில் அமைந்துள்ளது. அகழியின் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. தெற்குப் புறத்தில் தண்ணீர் காணப்படவில்லை.    கோட்டையின் மதில்களும் அகழியும் பார்க்க அழகாக உள்ளன. வேலூர் கோட்டையைப் போல இக்கோயில் நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்டதாகவும், விஜயநகர கட்டிடப்பாணியின் இறுதி வடிவில் அமைந்துள்ளதாகவும் அங்குள்ள கல்வெட்டுக் குறிப்பின் மூலமாக அறியமுடிந்தது.  தெற்கு நோக்கியுள்ள  ஏழு நிலைகளைக் கொண்ட  ராஜகோபுரத்தின் வாயிலில் மரத்தாலான பெரிய

மாங்கனித்திருவிழா

Image
மாங்கனித் திருவிழாவைப் பார்க்க வெகு நாட்களாகவே ஆசை. எங்கள் அண்ணி, அக்கா மருமகள் இருவரும் பிறந்த ஊர்  காரைக்கால். வருடாவருடம் போகலாம் என்று அவர்கள் கூறுவார்கள். ஆனால் எங்களால் போக முடியாமல் ஆகிவிடும்.  இரண்டாண்டுகளுக்கு முன் எனது அந்த ஆவல் நிறைவேறியது. இதற்கு முன்பு நான் காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். ஆனால் மாங்கனித் திருவிழாவிற்காக  2014இல்  சென்றேன். இன்று (19 சூன் 2016) காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் நாங்கள் சென்ற அந்நாள் நினைவிற்கு வந்தது.  அம்மையார் தரிசனம் தஞ்சையிலிருந்து காலை புறப்படும் ரயிலில் புறப்பட்டு நானும் குடும்பத்தினரும் காரைக்கால் சென்றோம். ரயிலைவிட்டு இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் காரைக்கால் அம்மன் கோயிலுக்குச் சென்றோம். அனைவருக்கும் தந்தையான சிவபெருமானால் அம்மா என்று அழைக்கப்பட்ட புகழ் பெற்றவர் புனிதவதியார்  காரைக்கால் அம்மையார் போகும் வழியெல்லாம் ஒரே கூட்டம். காணும் இடமெல்லாம் விழாக்கோலம். கோயிலின் முகப்பில் பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. முதலில் கோயிலுக்குச் சென்றோம். கோயிலின் வாயிலில

குருக்கத்தி மாசி பெரியசாமி : தினமணி

Image
இன்றைய (6.5.2016) தினமணி, வெள்ளிமணியில் வந்துள்ள எனது கட்டுரையின் விரிவான வடிவம், அதிகமான புகைப்படங்களுடன். ( நன்றி : தினமணி) அமைவிடம் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளக்கோயில் கிராமத்தில் குருக்கத்தி என்னும் ஊரில் மாசி பெரியசாமி கோயில் அமைந்துள்ளது. வெள்ளக்கோயில்-கரூர் சாலையில் 3 கிமீ தொலைவிலும்,  கரூர் -வெள்ளக்கோயில் சாலையில் 40 கிமீ தொலைவிலும் இக்கோயில் உள்ளது.  வரலாறு கொல்லிமலையிலுள்ள மாசி பெரியண்ணசாமியை பல இனத்தவர்கள் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். தொடர்ந்து அவ்வாறாக மலையேறி செல்ல இயலாத நிலையில்  நாடார் இனத்தைச் சேர்ந்த குல பங்காளிகள் சிலர் ஒன்றுசேர்ந்து  கொல்லிமலையிலிருந்து பிடிமண்ணை எடுத்துவந்து சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு குருக்கத்தியில் வைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டில் பெரியசாமி பல இடங்களில் வழிபடப்படுகிறார். குருக்கத்தியில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதப் பௌர்ணமியில் விழா நடத்தி வருகின்றார்கள்.  சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகச்சிறிய கோயிலாக சுற்றுச்சுவர் எதுவுமின்றி இக்கோயில் இருந்தது. திருப்ப

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

அந்நாளில் தட்டச்சும் சுருக்கெழுத்தும் தற்போது எட்டாம் வகுப்புக்குமேல் படித்துவிட்டு உயர் நிலைப்பள்ளி போனதும் படிக்க நேரம் இல்லை என்று சொல்கிறார்கள். 1970க்கு முன்பு எட்டாம் வகுப்பு முடித்திருந்தால் ஆசிரியர் வேலை, வங்கிகளில் வேலை வாய்ப்புக்கும் இந்த தட்டச்சு உதவியாக இருந்தது. இன்று மாணவ மாணவிகள் ஒரு பட்டம் வாங்கியவுடன் வேறு எதுவும் வேண்டாம் என்று இருக்கிறார்கள். படிப்புக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. அன்று தட்டச்சு, சுருக்கெழுத்து தெரிந்தால் தான் வேலை வாய்ப்புகள் அமையும். இப்போதும் அதன் முக்கியத்துவத்தை நாம் சற்றுச் சிந்திப்போம்.  தட்டச்சுப்பொறியின் பயன்பாடு கணினியின் வரவால் தட்டச்சுப் பொறிகள் விலைக்கு விற்கப்பட்டு, பயன்பாடு இல்லாமல் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. ஆங்காங்கு இருக்கும் ஒரு சில தட்டச்சுப்பொறிகள் மிகக் குறைந்த அளவில் காணப்படுகின்ற தட்டச்சு சுருக்கெழுத்து நிலையங்களில் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரசுத்தேர்வு எழுத மட்டும் இவை பயன்படுத்தப்படுகின்றன. நாளடைவில் இதுவும் குறைந்துவிடும் நிலை எழ வாய்ப்புள்ளது.  கணினி மூலம் தட்டச்சு கணினியின் மூலமாக கணினி

வேதாரண்யம் மறைக்காட்டீஸ்வரர் கோயில்

Image
2013 புத்தாண்டை முன்னிட்டு மந்த்ராலயம் மற்றும் ஹம்பிக்கு குடும்பத்துடன் சென்றுவந்த அனுபவம் தினமணியில் கட்டுரையாக வெளிவந்தது. அக்கட்டுரையைப் பார்த்ததும் தொடர்ந்து கோயில்களுக்குச் செல்லும்போது பெற்ற அனுபவங்களை  எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவ்வகையில் அவ்வப்போது சென்ற இடங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். அவ்வகையில் எங்களது வட இந்தியப்பயணம், உவரிக்கோயில், நல்லிக்கோயில் போன்ற இடங்களுக்குச் சென்ற அனுபவங்கள் கட்டுரைகளாக வெளிவந்தன. இவை தவிர வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையும் வெளியானது. இக்கட்டுரைகளை தனியாக வலைப்பூ தொடங்கி அவற்றில் பதிய விரும்பி 2016 மகாமக ஆண்டில் (பிப்ரவரி 13-22 மகாமக நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில்) எழுத ஆரம்பிக்கிறேன். வலைப்பூவில் முதல் பதிவாக நாங்கள் வேதாரண்யம் கோயிலுக்குச் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். சில மாதங்களுக்கு முன் வேதாரண்யத்திலுள்ள கோயில்களுக்கு  நானும் என் கணவரும் சென்றோம். வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு சித்திரவேலு எங்களை வேதாரண்யம், அகத்தியான்பள்ளி, கோடியக்கரை, ஆகிய