Posts

Showing posts from June, 2016

மாங்கனித்திருவிழா

Image
மாங்கனித் திருவிழாவைப் பார்க்க வெகு நாட்களாகவே ஆசை. எங்கள் அண்ணி, அக்கா மருமகள் இருவரும் பிறந்த ஊர்  காரைக்கால். வருடாவருடம் போகலாம் என்று அவர்கள் கூறுவார்கள். ஆனால் எங்களால் போக முடியாமல் ஆகிவிடும்.  இரண்டாண்டுகளுக்கு முன் எனது அந்த ஆவல் நிறைவேறியது. இதற்கு முன்பு நான் காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். ஆனால் மாங்கனித் திருவிழாவிற்காக  2014இல்  சென்றேன். இன்று (19 சூன் 2016) காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் நாங்கள் சென்ற அந்நாள் நினைவிற்கு வந்தது.  அம்மையார் தரிசனம் தஞ்சையிலிருந்து காலை புறப்படும் ரயிலில் புறப்பட்டு நானும் குடும்பத்தினரும் காரைக்கால் சென்றோம். ரயிலைவிட்டு இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் காரைக்கால் அம்மன் கோயிலுக்குச் சென்றோம். அனைவருக்கும் தந்தையான சிவபெருமானால் அம்மா என்று அழைக்கப்பட்ட புகழ் பெற்றவர் புனிதவதியார்  காரைக்கால் அம்மையார் போகும் வழியெல்லாம் ஒரே கூட்டம். காணும் இடமெல்லாம் விழாக்கோலம். கோயிலின் முகப்பில் பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. முதலில் கோயிலுக்குச் சென்றோம். கோயிலின் வாயிலில