Posts

Showing posts from 2017

திருநாலூர் மயானம்

Image
நாலூர் மயானம் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரை 12 மே 2017 நாளிட்ட தினமணி இதழில் மோட்சமளிக்கும் மயானம் திருக்கோயில் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையின் விரிவாக்க வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன்,  அவ்விதழுக்கு நன்றியுடன்.  திருநாலூர் மயானம் கோச்செங்கட்சோ ழனால் கட்டப்பட்ட மாடக் கோயிலாகும். காவிரியின் தென்கரையில்  96 ஆவது தலமாகப் போற்றப்படுகின்ற   இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் கும்பகோணம் -குடவாசல்  சாலையில்  திருச்சேறையை அடுத்து அமைந்துள்ளது.  இக்கோயில்  இருக்கும் ஊர் முன்பு சதுர்வே தி மங்கலம் என்றும், நால்வேதியூர்   என்றும் அழைக்கப்பட்டு பின்னர்  மருவி திருநாலூர் என்ற பெயரைப்  பெற்றது. நாலூர் மயானத்தைப் போல தமிழ்நாட்டில் மயானம் என்ற  பெயரில் உள்ள கோயில்கள்  கச்சி ம யானம், கடவூர் மயானம், காழி மயானம் என்பனவாகும். நாலூர் மயானம் ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பெருமையுடைதாகும். ( இக்கோயிலின் தென்மேற்கே நாலூர்  என்ற வைப்புத்தலம்  உள்ளது.)  கோயிலின் நுழைவாயில் வாயிலில் நுழைந்ததும் ஏதோ ஒரு வீட்டின் வாசல் வழியாகச் செல்வது போல இருந்தது. வாசலில் இ

வாசிப்பை நேசிப்போம் : தினமணி

Image
உலக புத்தக தினமான இன்று (23 ஏப்ரல் 2017), தினமணி சென்னைப்பதிப்பில் கருத்துக்களம் பகுதியில்  வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் 7 ஜுலை 2014 அன்று வெளியான   என் கட்டுரையை பகிர்வதில் மகிழ்கிறேன்,  அவ்விதழுக்கு நன்றியுடன்.  ஒரு விடுமுறையின்போது படிக்கும் பழக்கம் எனக்கு ஆரம்பித்தது. தற்போது தொடர்ந்து செய்தித்தாளை படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள எனக்கு, வாசிப்புப் பழக்கம் பல பயன்களைத் தந்துள்ளது என்பது மறக்க முடியாத உண்மை. திருமணத்திற்கு முன்பாக நான் ரேடியோவில் பாட்டுகள், செய்திகள், ஒலிச்சித்திரம் போன்றவற்றை ஆர்வமாகக் கேட்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தேன். வாரம் ஒரு முறை எனது சகோதரர்கள் கதைப்புத்தகம் வாங்கித் தருவார்கள். அதை சகோதர - சகோதரிகள், அண்ணிகள் போட்டி போட்டுக் கொண்டு படிப்போம். என் தந்தை அவ்வப்போது செய்தித்தாளை வாங்கிப் படிப்பார்கள். அப்போது வாசிக்கும் பழக்கம் மிகக் குறைவாகவே இருந்தது. எங்களது திருமணத்திற்குப் பின் நாளிதழ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளச் சொன்னார் என் கணவர். எனக்கு அப்போது படிப்பில் கவனம் இல்லை. குடும்பத்தைக

மனதில் நிற்கும் மகாமகங்கள்

Image
-கடந்த ஆண்டு இதே நாளில் (22 பிப்ரவரி 2016) மகாமகம் சென்ற நினைவாக -   நான் கண்ட மூன்று மகாமகங்களைப் பற்றிய அனுபவங்கள் இன்று பத்திரிக்கை.காம். இணையதளத்தில் வெளியாகியுள்ளது. வெளியிட்ட அவ்விதழுக்கு மனமார்ந்த நன்றி. கும்பகோணம் என்றால் கோயில்கள். காஞ்சீபுரத்திற்கு அடுத்தபடியாக கும்பகோணத்தைக் கோயில் மாநகரம் என்று கூறுவர். ஆண்டுக்கொரு முறை வருவது மாசி மகம். குறிஞ்சி மலர் பூப்பது 12 ஆண்டுக்கொரு முறை. அதுபோல பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை வருவது மகாமகம். குறிஞ்சி மலர் பூத்ததை பார்த்த அனுபவம் எனக்கு இல்லை. ஆனால் முதன்முதலாக நான் பார்த்த மகாமகத்தை என்னால் மறக்க முடியாது. இதுவரை மூன்று மகாமகங்களை நான் பார்த்துள்ளேன்.  1980 மகாமகம் 1980இல் கும்பகோணத்திற்கு மகாமகத்திற்கு என் பெற்றோர் சென்றுவந்து அதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் முதன்முதலாக மகாமகத்தைப் பற்றி அறிந்தேன். 1992 மகாமகம் நான் ஆவலோடு விசாரித்த கும்பகோணத்திற்கே திருமணம் ஆகிவருவேன் என நான் எதிர்பார்க்கவில்லை. அதற்கு முன் கோயில்களுக்கு அதிகம் சென்றதில்லை. புகுந்த இடம் கும்பகோணம் ஆகிவிட்ட நிலையில் வீட்டிலுள்ளோர

அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை

Image
2014இல் காசிக்கும் பிற இடங்களுக்கும் நாங்கள் குடும்பத்துடன் சென்று வந்ததைப் பற்றி   அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை  என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை 7 டிசம்பர் 2014 நாளிட்ட தினமணி இதழில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையின் மேம்பட்ட வடிவினைப் பகிர்வதில் மகிழ்கிறேன். தினமணி இதழுக்கு நன்றி.  காசி மற்றும் பிற தலங்களுக்குக் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தஞ்சையிலிருந்து ரயிலில் புறப்பட்டு சென்னை வந்தோம். சென்னையிலிருந்து அலகாபாத்திற்கு எங்களை வழியனுப்ப மகன், மருமகள், பேரன் ஆகியோர் வந்தனர். அவர்கள் எங்களை ரயிலில் அமர வைத்துவிட்டு, வட மாநிலங்களில் முன்பதிவு செய்திருந்தால்கூட நம் இருக்கையில் அவரவர் போக்கில் வந்து அமர்வார்கள் என்றுகூறி  எங்களை கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கும்படி சொல்லி வழியனுப்பினர். எங்கள்  அண்ணியின் உறவினர் துணையாக வந்தனர். அவர்கள் தொடர்ந்து காசிக்கு 17 ஆண்டுகளாக தம்பதிசகிதமாக வருவதாகக் கூறினர். அவர்களுடன் செல்வதைப் புண்ணியமாகக் கருதி எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.    அலகாபாத் 8.10.2014 விடியற்காலை அலகாபாத் வந்து நகரத்தார் சத்திரத்தில் தங்கினோம். உடைமைகளை அங்க