Posts

Showing posts from May, 2022

திரு திருமூர்த்தி பணி நிறைவு (31 மே 2022)

Image
இன்று பணிநிறைவு பெறும் என் தங்கை தி.தமிழ்ச்செல்வியின் கணவர் திரு. த.   திருமூர்த்தி அவர்களுக்கு என் சார்பாகவும், எங்கள் குடும்பம் சார்பாகவும் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரு த.திருமூர்த்தி (பி.1962) அவர்களின் பெற்றோர் (நினைவில் வாழும்)  திரு .  ப . தங்கையன்   நாடார் - திரு மதி.  தி . ராஜம்மாள் .  த ந்தை கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  ஆசிரிய ராகப் பணியாற்றியவர். தாயார்  இல்லதரசி . அவருக்கு உடன்பிறந்தோர் ஒரு அண்ணன் மற்றும்  ஒரு தங்கை. அவருடைய மனைவி (என்னுடைய தங்கை)  திருமதி தி . தமிழ்ச்செல்வி . மூத்த மகன்  திரு . தி . ரஞ்சித்குமார்  ( மருமகள் ர .  பூஜா ,  இரண்டு பேரன்கள் ஹர்ஷிவ், ஹிரித்விக் ) இளைய  மகன் செல்வன் தி.   திலக் . மகன்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.  அவர், தான் பணிக்கு வந்த சூழலை அவர் பின்வருமாறு கூறினார். “எனக்கு பி . எஸ் . சி ., இரண்டாம் வருடம் படித்துக்கொண் டிருந்தபோது அரசுத்துறையில் தகுதி அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணி (1990) கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிடைத் த து . இது எனக்கு பிடித்தமான வேலை ,  

அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி : 9ஆம் வகுப்பு

Image
எட்டாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாட்கள் முடிந்தவுடன்  டி.சி. வாங்குவதற்காக நான் என் தோழிகளுடன் பள்ளிக்குச் சென்றேன். தலைமையாசிரியரிடம் டி.சி.யை பெற்றபின் எந்தப் பள்ளியில் சேரலாம் என முடிவு செய்து வீட்டிற்கு வந்துவிட்டோம். தோழிகளுடன் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசினர்  மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேரப்போகிறோம் என அம்மாவிடம் கூறினேன். நடந்து செல்வதற்குக் கஷ்டமாக இருக்குமே என்று அம்மா சொன்னபோது மதிய சாப்பாடு எடுத்துக்கொண்டு செல்வோம் என்றேன். பள்ளியின் நுழைவாயில் டி.சி. வாங்கிய ஒரு வாரத்திற்குள் ஜெயலெட்சுமி, சுபா, ஜாக்குலின், அனுசியா, தமிழ்ச்செல்வி ஆகிய தோழிகளுடன் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ( 1978-79)   சேர்ந்தேன். சிலருடைய பெயர் நினைவில் இல்லை. முதலில் நடந்து செல்வதற்குச் சிரமமாக இருந்தது. பிறகு பழகிக்கொண்டேன். ஒன்பதாம் வகுப்பறையில்  அமர்வதற்கு இருவர் அமரும் வகையில் மேஜையுடன்கூடிய இருக்கை இருந்தது. அதில் புத்தகங்களையும், நோட்டுகளையும்  வைத்து பூட்டிவைத்துக் கொள்ளலாம். இது எனக்குப் புதிதாக இருந்தது. ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து பள்ளிக்குக் கிளம்பி, மாலை நான்கரை மணிக்குள்