Posts

Showing posts from May, 2019

இன்றும் தொடரும் வானொலி கேட்கும் அனுபவம்

Image
1939 மே 16இல் தொடங்கப்பட்ட திருச்சி வானொலி நிலையத்தின் 80ஆவது ஆண்டு விழா நிறைவு பெறுகின்ற  இவ்வேளையில் வானொலியுடனான    என் 40 வருட அனுபவத்தை நினைவுகூர்வது மகிழ்ச்சியாக உள்ளது.      தற்போது எங்கள் இல்லத்தில் நான் சுமார் 40 ஆண்டுகளாக வானொலியில் திரைப்படப் பாடல்கள் கேட்டு வருகிறேன். நான் பிறந்த வருடத்தில் (1965) வீட்டில் ரேடியோ வாங்கியதாகப் பெருமையாகக் கூறுவார்கள். அந்த ரேடியோப்பெட்டி பெரியதாகவும், ஸ்விட்ச்கள் வித்தியாசமாகவும், பார்க்க அழகாகவும் இருக்கும். 50 வருடங்களுக்கு முன்னர் ஒரு சில வீட்டில்தான் வானொலி இருக்கும். வானொலியில் அப்பா செய்திகள் கேட்பார். காலையில் விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு என்று நிகழ்ச்சிகள் தொடங்கும். காலை 7.25க்கு சேவை செய்திகள் என்று ஆரம்பித்து அன்றைக்கு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளைக் கூறுவார்கள். அதை நாங்கள் கேட்டுக்கொண்டு பிடித்த நிகழ்ச்சிகள் என்றால் கேட்க உட்கார்ந்து விடுவோம். ஞாயிற்றுக்கிழமைகளில் சுசித்ராவின் ஹார்லிக்ஸ் குடும்பம் என்று ஒரு நாடகம் ஒலிபரப்புவார்கள். அப்பாவை போடச்சொல்லி, காலை 12.00 மணியளவில் அந்த நிகழ்ச்சியை நாங்கள் தவறாமல் கேட்போ