Posts

Showing posts from August, 2023

அமர்நாத் யாத்திரை

Image
என் சகோதரிகளின் குடும்பத்தார் ஜூலை 2023இல் அமர்நாத் செல்லத் திட்டமிட்டிருந்தபோது, அதற்கு முன்னர் நான் நாளிதழில் படித்த செய்தி நினைவிற்கு வந்தது.  "தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத்தில்  3,880 மீட்டர் உயரத்தில் ஆண்டுதோறும் இயற்கையாக பனிலிங்கம் உருவாகிறது. இந்த லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். 62 நாள்களுக்கு நீடிக்கவுள்ள  அமர்நாத் யாத்திரை காஷ்மீரில் சனிக்கிழமை (1.7.2023) முறைப்படி தொடங்குகிறது. 48 கி,மீ நீளம் நுன்வான்/பஹல்காம் பாதையிலும் கந்தர்மால்  மாவட்டத்தில் உள்ள 14 கி.மீ. நீளம் பால்டால் பாதையிலும் யாத்திரை நடைபெற உள்ளது." (நன்றி : தினமணி,  1.7.2023) சுற்றுலா செல்வது யாவருக்கும் பிடித்த ஒன்று. தமிழ்நாட்டில் எண்ணிலடங்கா கோயில்கள் இருக்கின்றன. நான் தமிழ்நாட்டிற்கு வெளியில் முதலில் சென்றது மந்த்ராலயம். அடுத்து காசி, மைசூர், பேலூர், ஹலேபேட், சோம்நாத்பூர் போன்ற இடங்களுக்குச் சென்றுள்ளேன்.  இந்த வருடம் என் சகோதரிகளின் குடும்பத்தார் பஞ்சாபில் பொற்கோயில், வாகா பார்டர், ஜாலியன்வாலாபாக் நினைவுச்சின்னம், அமர்நாத் பனி லிங்கம்,  ஜம்மு-காஷ்மீரில

வாழ்த்துக்கள், செல்வராணி சரவணன்

Image
இன்று  (2.8.2023) சென்னை வானொலி நிலைய விவித்பாரதி   எப்.எம்.இல் (Vividh Bharati தமிழ் FM 102.3) சென்னை பேஷன் இன்ஸ்டிடியூட்டின் உரிமையாளர் திருமதி. ச. செல்வராணி சரவணன் சிறப்பாக உரையாடினார். அவருடைய 15 வருட அனுபவத்தைப் பகிர்ந்த விதம் சிறப்பாக இருந்தது.  அவர் என் அண்ணனின் (திரு.தி.ராமமூர்த்தி-திருமதி.ரா.கண்மணி) மூத்த மகள் செல்வராணி. அவர் சிறுவயதிலேயே சுறுசுறுப்புடன் இருப்பார். கைத்தொழில் கற்றுக்கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருபவர். உல்லன் நூலில் அவர் பின்னுவது மிக அழகாகவும், ஒன்று போலவும் காணப்படும். திருமணத்திற்குப் பிறகு, சென்னையில் குடியேறிய அவர் சிறுவயதில் தான் கற்றுக்கொண்ட கலையைத் தொடர ஆரம்பித்தார். அவரது  தையற்கலை இன்று பலருக்குப் பயன்படுகிறது. அவர் புரியும்படி சொல்லிக்கொடுப்பதில் வல்லவர்.  நான் அவரிடம்தான் உல்லனில் நிலத்திரையையும், அதில் தொங்குகின்ற பொம்மையையும், கண்ணடியாலான டியூபில் ஒரு கூடை பின்னவும்  கற்றுக்கொண்டேன்.  வீட்டில் ராணி என்று அழைப்போம். அவரது கணவர் செல்வா என அழைப்பார்.  அவருடைய அம்மாவின் ஊக்கமும், கணவரின் உந்துதலும், அவருடைய விடாமுயற்சிக்குத் துணையாக அமைந்தன.  இன்