Posts

கடைசிப் பக்கம் : கண்ணதாசன்

Image
அண்மையில் கண்ணதாசனின் பல நூல்களைப் படித்தேன். அதில் கடைசிப்பக்கம் நூலிலிருந்து எனக்குப் பிடித்தவற்றைப் பகிர்கிறேன். 1.காதலைக் காவியத்திற்கு விட்டுவிடுங்கள்; உங்கள் திருமணத்தைப் பெற்றோரிடம் ஒப்படையுங்கள்; பிறகு உங்கள் எதிர்காலத்தைப் பாருங்கள். 2.நாம் செய்யாத ஒன்றுக்காக நாம் தண்டிக்கப்படுவோமாயின், அதன் பெயரே ஊழ்வினை. 3.செய்வினை திருத்தப்படலாம்; ஊழ்வினையைத்  திருத்தமுடியாது. 4.சந்நியாசி அளந்து வாழ்கிறான்; சம்சாரி அளவுக்கு மீறி வாழ்கிறான். 5.நம்பிக்கை வைத்து ஒருவனைப் பின் தொடரும்போது நீ அவசரக்காரனாக இருந்தால் அதுவரையில் பட்ட கஷ்டம் வீணாகிவிடும். 6.குழந்தையின் நம்பிக்கையைத் தாய் சிதைத்துவிட்டால், குழந்தை கொடியவனாக மாறிவிடக் கூடும். 7.படுக்கையில் இருக்கும் நோயாளிக்குப் பிரார்த்தனையைத் தவிர வேறு பயனுள்ள கருவி எது? 8.நல்ல சந்தர்ப்பங்களை எதிர்ப்பார்த்து, வரும் சோதனைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள். 9.பிறரை வரவேற்றுக் கருணைக் காட்டுவதே கோவில். ஆகவே, இந்துவின் குடும்பம் ஒரு கோவில். 10.ஆடை அணிவதில் கூட  இனி அடக்கம் வேண்டியிருக்கும். 11."நாம் சொத்து சேர்க்காமல் விட்டு விட்டோமே" என்று நான் வருந்