Posts

Showing posts from August, 2021

மக்கள் ஊழியச் சங்க நடுநிலைப்பள்ளி : அன்றும் இன்றும்

Image
தஞ்சாவூர் மக்கள் ஊழியச் சங்க நடுநிலைப்பள்ளியில்  நாங்கள் படித்த காலத்தில் ( 1970-78)  இரு புறமும் செடிகள் இருக்கும் . மைதானத்தின் நடுவில் வாதாங்காய் மரம் இருக்கும் . விளையாட்டு வகுப்பின்போது மைதானத்தில்   கீழே விழுந்துகிடக்கும் வாதாங்காயை எடுத்து , உடைத்து அதில் உள்ள பருப்புகளைத் தின்போம் . அது முந்திரி சுவையோடு இருக்கும் . ஒரு வகை பூ மரம் இருக்கும் .  அந்தப் பூவை பறித்துத் தின்போம் . அது புளிப்புச்சுவையுடன் இருக்கும் . அதைத் தவிர சாணிக்காய் மரம் என்ற மரம் இருக்கும் .   அதன் காயைத் தண்ணீரில் போட்டால் ஊறிவிடும் . வேப்பமரத்தில் இருந்து உதிரும்   வேப்பம்பழங்களை மற்றவர்கள் தின்பதை பார்த்திருக்கிறேன் . நான் தின்றது கிடையாது . பள்ளியின் வாசல் கதவுகளாக மூங்கிலால் ஆன தட்டிகள் இருக்கும் .  பள்ளியின்  வளா கத்தில் நுழைந்ததும் இடதுபுறம் ஒன்றாம் வகுப்பு  முதல் மூன்றாம் வகுப்பு வரை  இருக்கும் .   வகுப்பில் உட்காருவதற்கு நீளமான ஒரு பலகை இருக்கும் .  மூன்றாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு வரை பெஞ்சில் அமர்ந்திருப்போம் .  எட்டாம் வகுப்பில்தான் நீளமான டெஸ்கும் ,  பெஞ்சும் இருக்கும் .  நாங்கள் படித்தபோது

மக்கள் ஊழியச் சங்க நடுநிலைப்பள்ளி : 6-8 ஆம் வகுப்பு

Image
ஆறாம் வகுப்பு ஆசிரியர் சீதாராமன் சார் . அவர் பாடங்களை வேகமாக நடத்துவார் . அவர் போர்டில் எழு து வது புரியாது . நாங்கள் ரஃப் நோட்டில் எழுதிக்கொண்டு அப்புறம் நோட்டில் எழுதிவைத்துக் கொள்வோம் . கணக்கு டீச்சர் வந்தால் பயமாக இருக்கும் . வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றால் அவர் கிள்ளுவார் அல்லது குச்சியால் அடிப்பார் . ஒவ்வொரு பாடத்துக்கும் ஆசிரியரோ டீச்சரோ வகுப்பெடுக்க வருவார்கள் . அப்போது வாரம் ஒரு முறை விளையாட்டு , கைத்தொழில் வகுப்புக்கள்   உண்டு . ஏழாம் வகுப்பு ஆசிரியர் ரமணி சார் . அவர் உயரமாக இருப்பார் . பாடப்புத்தகத்தை எடுத்து யாரையாவது வாசிக்கச் சொல்லி அதற்கான பொருளைக் கூறுவார் . ஆசிரியர்கள் வீட்டுக்கணக்கு , அறிவியல் பாடத்தில் உள்ள படங்களை வரைதல் போன்ற வீட்டுப் பாடங்களைத் தருவார்கள் . ஆங்கிலத்தில் சிறிய கதைகளைக் கொண்ட நான்டீடெயில் புத்தகம் உண்டு .            எட்டாம் வகுப்பு சென்றதும் அப்போது ஈஎஸ்எல்சி தேர்வு என்றும் , ஆகையால் கவனமாக படிக்கவேண்டும் என்றும் சொன்னார்கள் . வகுப்பாசிரியரான நபிகள்நாயகம் அவர்களை அனைவரும் அண்ணா சார் என்று அழைப்போம் . அவர் ஆங்கிலம் பாடம் புரியும்படியாகவும்   நட