தஞ்சாவூர் : உஜ்ஜயினி மகாகாளியம்மன் கோயில்
உஜ்ஜயினி
மகாகாளியம்மன் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரை 6.4.2018
நாளிட்ட தினமணி இதழில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையின் விரிவாக்க வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன்.
நாளிட்ட தினமணி இதழில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையின் விரிவாக்க வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன்.
உஜ்ஜயினி மகாகாளியம்மன் கோயில் தஞ்சாவூர் நகரில் கீழவாசல் பகுதியில் வெள்ளைபிள்ளையார் கோயிலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. பெருமுயற்சி எடுத்து உள்ளூர் பொதுமக்கள் குழுக்கள் அமைத்து வசூலித்து சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினர். 1989இல் இக்கோயிலின் முதல் குடமுழுக்கும், 2008இல் இரண்டாவது குடமுழுக்கும் நடைபெற்றன.
வரலாறு
இக்கோயிலில்
உள்ள அம்மனைப் பற்றி வாய்மொழியாக பல கதைகள் கூறுகின்றனர். வணிக நோக்கில் வெளியூரிலிருந்து
தஞ்சாவூருக்கு ஒரு குடும்பத்தார் வண்டி கட்டிக்கொண்டு வந்துள்ளனர். அவ்வாறு வரும்போது
அவர்களுடன் பத்து வயது மதிக்கத்தக்க சிறுமியும் அவளுடைய அண்ணனும் இருந்தார்கள். தற்போது
கோயில் அமைந்திருக்கும் இடத்தின் அருகே ஒரு குடிசையில் அவர்கள் தங்கியிருந்தனர். அனைவரும்
வெளியில் சென்றிருந்தபோது சிறுமி மட்டும் வீட்டில் இருந்தாள். வெளியே சென்றவர்கள் திரும்பிய
சமயம் வீட்டின் கதவு உள்ளே தாழிடப்பட்டிருந்தது. வெளியிலுள்ளோர் அழைத்தும் கதவு திறக்காமல்
இருப்பதைப் பார்த்து அவளுடைய அண்ணனும், அருகிலுள்ளோரும் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். அந்தச் சிறுமி அங்கு ஒரு சிலையாகக்
காட்சியளித்தாள். உடனே ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து
ஒரு பூடம் (சிறு பெண் தெய்வம் வசிப்பதற்காகக் கட்டப்பட்ட இடம்) அமைத்து வழிபட ஆரம்பித்தனர்.
வேண்டுதல்கள்
இக்கோயிலில்
உள்ள அம்மன் மிகுந்த சக்தி வாய்ந்தவளாகவும், மக்களின் வேண்டுதலை நிறைவேற்றக்கூடியவளாகவும்
உள்ளார். நம்பிக்கையோடு வரும் பக்தர்களின் குறைகளை அம்மன் தீர்த்துவைக்கின்றார். விழாக்களின்போது
அதிக எண்ணிக்கையில் முளைப்பாரி எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், பால் குடம் தூக்குதல்,
பொங்கல் வைத்தல், மொட்டையடித்தல், காது குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக்
கொள்கின்றார்கள்.
அமைப்பு
இக்கோயில்
நுழைவாயிலில் நுழைந்து உள்ளே செல்லும்போது மூலவர் கருவறைக்கு முன்பாக பலி பீடம், கொடி மரம்,
சிங்கம், சூலம், காணப்படுகின்றன.
கோயிலைச்
சுற்றி வரும்போது ஏனாதிநாய நாயனார், சிவதுர்க்கை, கல்யாண கணபதி, அய்யப்பன், அனுமன்
ஆகியோரைக் காணலாம். திருச்சுற்றில் உள்ள வேப்ப மரத்தின் அருகே நாகர்களைக் காணலாம்.
அடுத்து நவக்கிரகங்கள் உள்ளன. மூலவர் சன்னதியில் அம்மன் அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபியாக
கிழக்கு பார்த்த நிலையில் காட்சி தருகிறார். மூலவர் சன்னதியின் இரு புறமும் செல்வ விநாயகரும்,
வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும் உள்ளனர்.
சிறுமி சிலையாக நின்றது ஆச்சர்யமளிக்கிறது.
ReplyDeleteஅற்புதமான வரலாறு அறிய வைத்தமைக்கு நன்றி.
KILLERGEE Devakottai
நன்றி சகோதரியாரே
ReplyDeleteகரந்தை ஜெயக்குமார்
நல்லதொரு வரலாறு அறியத் தந்தீர்கள்.மிக்க நன்றி.
ReplyDeleteThulasidharan V Thillaiakathu