Posts

Showing posts from 2025

பாஸ்கர் அண்ணன்

Image
எனது பெரியப்பாவின் (திரு. தில்லையப்ப நாடார்-திருமதி. தி. மீனம்மாள் அவர்களின்) இளைய மகன் திரு பாஸ்கர்  அவர்கள் 31.8.2025 அன்று காலை சென்னையில் இயற்கை எய்தினார். அந்தச் செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். குடும்பத்தாருடன் சென்னை சென்று இறுதி அஞ்சலி செலுத்தினேன்.  புகைப்படம் நன்றி: பா.சங்கர் முகநூல் பக்கம் பாஸ்கர் அண்ணன், எங்கள் வீட்டில் ஒருவராக வளர்ந்தவர். பழகுவதற்கு இனிமையாகவும், எளிமையாகவும், பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பார். உழைப்பில் நேர்மை, விட்டுக்கொடுத்தல், பொய் கூறாமை ஆகிய நல்ல குணங்களை அவரிடம் நான் கண்டுள்ளேன். பணம் தொடர்பான விஷயத்தில் மிகவும் கவனமாகவும்  இருப்பார். மிகச்சிறந்த உழைப்பாளி. உற்றார் உறவினர்கள் மீதும், நண்பர்கள் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருப்பார். அவர், தஞ்சாவூரிலுள்ள தன்னுடைய சித்தாப்பாவின்  (என்னுடைய அப்பா) அலுமினியக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். சில ஆண்டுகள் கழித்து புதுக்கோட்டையில் உள்ள அலுமினிய ரோலிங் மில்லில் சேர்ந்து அங்குப் பணியாற்றினார். சில  வருடங்களுக்குப் பிறகு அவருடைய குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது...

பாவை விளக்கு : அகிலன்

Image
அகிலன் எழுதிய பாவை விளக்கு நூலினைப் படித்தேன். அவர் நான்கு பெண்களை மையமாக வைத்து இந்நாவலை எமுதியிருக்கிறார். கதையின் நாயகன் தணிகாசலம். நாயகன்மீது ஆசைப்படும் வயதில் மூத்தவளான தேவகி, நாயகன் ஆசைப்படும் நாட்டியக்கலைஞர் செங்கமலம், நாயகனுக்கு மனைவியாகும் அத்தை மகள் கௌரி, அவனுடைய எழுத்துக்குத் துணை நிற்கும் உமா ஆகிய நான்கு பெண் பாத்திரங்கள். இந்நால்வரையும் நூலசிரியர் குறைவில்லாமல்  வடிவமைத்திருப்பார். நிறைவாக இரண்டாவது மனைவியாக, உமாவை திருமணம் செய்துகொள்வார் கதாநாயகன்.   படிப்பதற்கு எளிமையாகவும், வாக்கிய அமைப்புகள் புரியும்படியாகவும் உள்ளன. இது, திரு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்து அதே பெயரில் திரைப்படமாக வெளியானது. நூலைப் படித்து முடித்ததும் தொலைக்காட்சியில் திரைப்படத்தைப் பார்த்தது நினைவிற்கு வந்தது. நூலின் சில பகுதிகள் என் மனதில் பதிந்தன. அவற்றைக் காண்போம்.   "தூய வாழ்க்கை என்றால் பெண்களின் நினைவில்லாத  வாழ்க்கை   "பணம் வாழ்க்கையில் மிகமிக முக்கியமான சாதனந்தான்......பணமில்லாத வாழ்க்கை எவ்வளவு கேவலமான வாழ்க்கை..." (பக்கம்.7...

தலைமுறைகள் ரசிக்கும் நடிகர் திலகம்

Image
நான்  சிறு வயதில் அண்ணன்களுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த  திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். அதில் ராஜபார்ட் ரங்கதுரை, வசந்த மாளிகை, பாலும் பழமும் இப்படியாக  பலப் படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.  அவருடைய படமும்,  பாடல்களும்   என்றுமே மறக்கமுடியாதவை,  என்னுடைய திருமணத்திற்குப் பின்பு கும்பகோணத்தில், மாமியார் வீட்டில் அனைவரும் சிவாஜி ரசிகர்கள். அதிகமாக சிவாஜி திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன்.  புகைப்படம் நன்றி : மாலை மலர் எங்கள் மாமியார் வீட்டிற்குப் பெரிய அண்ணன் மகன் ராஜு வந்தபொழுது அவனை அழைத்துக்கொண்டு வீட்டில் குடியிருப்பவர்களுடன்  பாசமலர் படத்திற்குச் சென்றோம். அவன் அந்தப்படத்தில் வரும் காட்சிகளையைப் பார்த்து தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். நான், அவனிடம் இது உண்மையில்லையப்பா என்று சமாதானம் செய்தேன். அவனுடைய சிறு வயது  பாசத்தை அப்போது பார்த்தேன். இப்பொமுதும்கூட பாசமலர் படம் பார்க்கும்போது அண்ணன் மகன் ஞாபகம் வந்துவிடும்.  நான் மாமியார், கொழுந்தனார், எங்கள் மாமா மகன் கர்ணன் மச்சான், விஜயா அக்கா ஆகியோருட...

தஞ்சாவூர் வெள்ளை விநாயகர் வெட்டுக்குதிரை வாகன விழா

Image
இன்று, தஞ்சாவூர், கீழ வாசல், அருள்மிகு வெள்ளை விநாயகருக்கு தஞ்சாவூர், நாடார் உறவின்முறை தர்ம பரிபாலன சங்கத்தால் நடத்தப்படுகின்ற 99ஆவது ஆண்டு வெட்டுக்கு திரை வாகன புஷ்ப விமான உற்சவத் திருவிழாவில் உறவினர்களுடன் கலந்துகொண்டு இறையருளைப் பெற்றேன். இவ்விழாவை நாடார் இனத்தவர்கள் வருடாவருடம் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு இவ்விழாவின்போது பகல் 12 மணிக்கு வெள்ளை விநாயகருக்கு பூஜை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமியை எழுந்தருளச் செய்து சிறப்பு மலர், நகை அலங்காரமும், தீபாராதனையும், நாதஸ்வரம் கச்சேரியுடன் நடைபெற்றது. பின்பு விழாவிற்கு வந்த அனைவருக்கும் சர்க்கரைப்பொங்கல், புளியோதரை, சுண்டல் ஆகிய பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இக்கோயிலுக்கு நான் இளம் வயதில் அம்மா, அண்ணன், அண்ணி, அக்கா, தங்கைளுடன் சென்றுள்ளேன். திருமணத்திற்குப் பிறகு குடும்பத்துடன் சென்றுள்ளேன். திருமண நாள், குழந்தைகள் பிறந்த நாள், போன்ற நாள்களிலும், விசேஷ நாள்களிலும் செல்கிறேன். ஏதாவது பொருட்கள் தொலைந்தால் விநாயகரை வேண்டினால் கிடைத்துவிடும், உடம்பு சரியில்லையென்றாலும் இவ்விநாயகரை நினைத்து வேண்டிக் கொண்டால் உ...

மரப்பாச்சி பொம்மைகள்

Image
அண்மையில் தினமணி நாளிதழில் வெளியான (வி.என்.ராகவன், மீட்டெடுக்கப்படும் மரப்பாச்சி பொம்மைகள் , தினமணி, கொண்டாட்டம், 23 பிப்ரவரி 2025)  கட்டுரையைப் படித்ததும் என் சிறு வயது நினைவுகள் மனதிற்கு வந்தன. இந்தப் பொம்மைகள் அனைவரின் வீட்டிலேயும் அப்போது இருக்கும். அன்று பெரியவர்கள் இந்த பொம்மைகளைக் கொண்டு செய்த கைவைத்தியத்தை இன்றும் சில வீடுகளில் கடைபிடிக்கிறார்கள். குழந்தைகளுக்குச் சளியோ, காய்ச்சலோ வரும்போது இந்தப் பொம்மையை வைத்து பத்து போடுவதற்கு எங்கள் அப்பாயி, எங்கள் அம்மாவுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்.  பின்னர் எங்களுடைய பெரியக்கா, இந்த முறையைப் பயன்படுத்தியதோடு, இந்தப் பத்தினைத் தாய்ப்பாலிலும் கலந்து போடலாம் எனக் கூறியிருக்கிறார்கள்.  என் மாமியார் அந்தக்கலவையில் கொஞ்சம் மஞ்சள் தூள், சாம்பிராணி, ஊதுபத்தித்தூள் ஆகியவற்றை ஒரு கரண்டியில் போட்டு நல்ல விளக்கில் சூடேற்றி, அதைக் குழந்தைகளின் உச்சந்தலை, நெற்றி, மார்பில், உள்ளங்கால்களில் தேய்த்துவிடுவதைப் பார்த்துள்ளேன். எனக்கு என் மாமியார் இந்தக் கைவைத்தியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள். அவர்களைப் பின்பற்றி நான் என் மகன்களுக்கும...

பனை உறை தெய்வம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

Image
பனை உறை தெய்வம் எனும் இந்நூலை 25 கட்டுரைகளை மையமாக வைத்து  திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் ஐயா எழுதியிருக்கிறார்.  பனைமரம் என்றால் எனக்குத் தெரிந்தது நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம், பனை ஓலைக்கொட்டான், பனை விசிறி, பனை வெல்லம், பனங்கற்கண்டு, பதநீர்,  ஓலைச்சுவடி,  ஆகியவையாகும். இந்நூலின் மூலமாக பல அரிய செய்திகளை அறிந்தேன். மூலவர் திருமேனி, தல மரம், நீர் நிலை ஆகிய மூன்றும் சிவன் கோயில்களின் இன்றியமையா அங்கங்களாகும். இவற்றை மூர்த்தி, விருட்சம், தீர்த்தம் என வட மொழியில் குறிப்பர். கோயில்களை வழிபாட்டுத் தலங்களாக மட்டும்  கொள்ளாமல் அவற்றை மனித வாழ்வோடு இயைந்த சமுதாயக் கேந்திரங்களாகவும் போற்றும் நெறி தமிழகத்தில் அண்மைக் காலந்தொட்டு தொடர்ந்து வருவதாகும்.  சனகாதி முனிவர்களுக்கு கல்லால மரத்தின் கீழ் இருந்தவாறு பரமேஸ்வரன் ஞானமுரைத்தது, திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகருக்கு குருந்த மரத்தின்கீழ் இருந்தவாறு ஞானத்தை நவின்றது, திருவெற்றியூரில் சுந்தரரை மகிழ மரத்தின்கீழ் இருந்தவாறு சத்தியம் உரைக்கப் பணித்தது என்ற வகையில் மரங்கள் என்பவை தெய்வத்தோடு  தொடர்புடையவையாகும். ஒவ்...