Posts

ஞானியார் முனைவர் வீ.ஜெயபால் (1954-2026)

Image
ஞானியார் முனைவர் வீ.ஜெயபால்  அவர்கள் நேற்று (9.8.2026) இயற்கையெய்திய செய்தியை அறிந்ததும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். முப்பதைந்து வருடங்களுக்கு மேலாக அவர் எங்களுடைய குடும்ப நண்பர்.  அவர் எழுதியுள்ள "வேலவர் வெற்றி வெண்பா" என்ற நூலின் வெளியீட்டுவிழா தஞ்சாவூரில் நடைபெற இருந்தது. நானும் அந்த நிகழ்ச்சிக்கு வருவதாக என் கணவரிடம் கூறினேன். அவரிடம் எத்தனை மணிக்கு வரவேண்டும் என போன் போட்டுக் கேட்கச் சொன்னேன். அவருடைய நம்பரில் அழைத்ததும் அவருடைய மனைவி எடுத்து அவருக்கு முடியவில்லை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்கள் என அழுதுகொண்டு பேசினார்களாம். நாங்கள் பார்ப்பதற்குக் கிளம்பியபோது நண்பர் ஒருவர் சார் இறந்து விட்டார் என்ற செய்தியைக் கூறினார். பிறகு நாங்கள் இருவரும் வீட்டிற்குச் சென்றோம். தெருவாசிகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அங்கு இருந்தனர். அவருடைய உடலுக்கு மாலை அணிவித்து சைவ சித்தாந்த நண்பர்கள் அனைவரும் முறைப்படி தேவாரப்பாடல்களைப்பாடினார்கள். 10 நாள்களுக்கு முன்புதான் அவருடைய மேற்கண்ட நூல் வெளியீடு தொடர்பாக எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். தன் உடலை கவனிப்பதை விட ச...