நான் பார்த்த கருடசேவை
"கருட சேவை தரிசனம் மங்களகரமானது. மன தைரியம், ஆயுள் வழங்கிடச்செய்வது, சர்ப்ப தோஷங்களை போக்கிட வல்லது. மனப்பயம், நடுக்கம் போன்றவற்றை நீக்கிடும் சக்தி படைத்தது. இவ்வருடம் 92 ஆவது ஆண்டாகும். முதல்முறையாக இவ்வருடத்திலிருந்து 27 கருடசேவை புறப்பாடு நடைபெறவிருப்பதும் கூடுதல் சிறப்பு. மிக கோலாகலமாக நடத்தபெறும் இந்தக் கருடசேவை வைபவத்தில் தஞ்சையைச் சுற்றியுள்ள 27 பெருமாள் கோயில்கள் பங்கேற்கின்றன. ஜூன் 6ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஹம்ச வாகனத்தில் எழுந்தருளும் திருமங்கையாழவார் முன்னே வர, அவரைத் தொடர்ந்து 27 கோயில் பெருமாள்களும் கருட சேவை காட்சி அளித்தபடி தஞ்சையின் நான்கு முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா காண்பார்கள். இந்நிகழ்வை தரிசனம் செய்வது அஸ்வமேத யாக செய்வதற்குச் சமமான பலன் தரவல்லது என்பது பெரியோர் வாக்கு" என்று நாளிதழில் வெளியான கட்டுரை (தினமணி, வெள்ளிமணி, சுஜாதாமாலி, 5.6.2026) மூலமாக அறிந்தேன். கட்டுரையைப் படித்ததும் கருட சேவையைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. 6.6.2026இல் நடைபெற்ற கருட சேவையைக் காணச் சென்றேன். முதன் முதலில் 15 வருடங்களுக்கு முன்பு இளைய மகன் சிவ...