Posts

Showing posts from 2026

மந்த்ராலயமும் ஹம்பியும்

Image
தொடர்ந்து சில ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டின் முதல் நாளன்று மந்த்ராலயத்திற்குக் குடும்பத்துடன் சென்று வரும் என் அத்தை பேரன் இந்த ஆண்டு பயணத்தின்போது உடன் சிலரை அழைத்துச் செல்லும் எண்ணத்தோடு எங்களைக் கேட்டபோது மந்த்ராலயம் செல்வதற்கான விருப்பத்தினைத் தெரிவித்தோம். எங்களது குழுவில் 25 பேர் குடும்ப உறுப்பினர்கள் சென்றோம். தஞ்சாவூரிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து மும்பை மெயிலில் மந்த்ராயலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்தோம். அங்கிருந்து மூன்று வேன்கள் மூலம் மந்த்ராலயம் சென்று சேர்ந்தோம். முதல்நாள்-மந்த்ராலயம்:  ராகவேந்திரர் சமாதியைத் சுற்றி வந்து வழிபட்டோம். வெளியில் வந்து சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்தோம். பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து கொண்டும், போய்க் கொண்டும் இருந்தனர். எங்களுக்குத் திரும்ப மனம் வரவில்லை. இரவு அங்கு நடந்த அன்னதானத்தில் பங்குகொண்டு உணவு அருந்தினோம். தொடர்ந்து ஆயிரக்கணக்கில் வந்துகொண்டிருக்கும் பக்தர்களுக்கு அவர்கள் அன்னம் பாலிக்கும் விதம் மனதைத் தொட்டது. சுறுசுறுப்பாகப் பணியாற்றும் மந்திராலயப் பணியாளர்கள், நேர்த்தியாக அன்னமிடப்படும் முறை, வரிசையாக பக்தர்கள் அமைதி காத்து அ...

அக்காவும் மச்சானும்

Image
எங்கள் வீட்டில் பெரிய அக்காவை (திருமதி க.வாசுமதி-திரு கனகராஜ்) சேர்த்து உடன் பிறந்தோர் நாங்கள் 10 பேர்.  இப்போது 70 வயதுக்கு மேல் ஆனபோதிலும் இன்று வரை அவரால் வேலை செய்யாமல் இருக்க முடியவில்லை, நம்மால் முடிந்த அளவு செய்வோம் என்பார்கள்.  அக்கா, மச்சான்   பள்ளிப்படிப்பை அவராகவே நிறுத்திவிட்டு, வீட்டில் தம்பி, தங்கைகளை கவனித்துக்கொண்டதோடு, அம்மாவுக்கு உதவியாக இருந்தார். வீட்டு வேலைகளைக் கற்றுக்கொண்டார். அம்மாவையோ, தங்கைகளையோ எந்த வேலையும் செய்யவிடமாட்டார். வீட்டு வேலை, சமையல் வேலை, தம்பி தங்கைகளை கவனிப்பது, வீட்டில் உள்ள மாடு கன்றுகளைப் பார்த்துக்கொள்வது என்ற அனைத்தையும் செய்வார். அக்காலத்தில் வாஷிங் மெஷின், மிக்சி கிடையாது. எல்லா வேலைகளையும் கைகளால் தான் செய்யவேண்டும்.   அக்கா அன்பு, பாசம், அக்கறை, கண்டிப்பு, நிதானம் ஆகியவற்றுடன் கோபம் வந்தால் தலையில் கொட்டுவார். எண்ணெய் தேய்த்து குளிக்கவைப்பது, தலையைச் சீவிவிடுவது, சாப்பாடு ஊட்டிவிடுவது, எங்களுக்கு முடியை பாப் கட்டிங் செய்வது, வீட்டிற்குச் யார் சென்றாலும் சாப்பிடவோ, காப்பி, பால் குடிக்கவோ கூறுதல், டயத்த...

நான் பார்த்த கருடசேவை

Image
"கருட சேவை தரிசனம் மங்களகரமானது. மன தைரியம், ஆயுள் வழங்கிடச்செய்வது, சர்ப்ப தோஷங்களை போக்கிட வல்லது. மனப்பயம், நடுக்கம் போன்றவற்றை நீக்கிடும் சக்தி படைத்தது. இவ்வருடம் 92 ஆவது ஆண்டாகும். முதல்முறையாக இவ்வருடத்திலிருந்து 27 கருடசேவை புறப்பாடு நடைபெறவிருப்பதும் கூடுதல் சிறப்பு. மிக கோலாகலமாக நடத்தபெறும் இந்தக் கருடசேவை  வைபவத்தில் தஞ்சையைச் சுற்றியுள்ள 27 பெருமாள் கோயில்கள் பங்கேற்கின்றன. ஜூன் 6ஆம் தேதி  சனிக்கிழமை  அன்று ஹம்ச வாகனத்தில் எழுந்தருளும் திருமங்கையாழவார் முன்னே வர, அவரைத் தொடர்ந்து 27 கோயில் பெருமாள்களும் கருட சேவை காட்சி அளித்தபடி தஞ்சையின் நான்கு முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா காண்பார்கள். இந்நிகழ்வை தரிசனம் செய்வது அஸ்வமேத யாக செய்வதற்குச் சமமான பலன் தரவல்லது என்பது பெரியோர் வாக்கு" என்று நாளிதழில் வெளியான கட்டுரை  (தினமணி, வெள்ளிமணி, சுஜாதாமாலி, 5.6.2026) மூலமாக அறிந்தேன். கட்டுரையைப் படித்ததும் கருட சேவையைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. 6.6.2026இல் நடைபெற்ற கருட சேவையைக் காணச் சென்றேன்.  முதன் முதலில் 15 வருடங்களுக்கு முன்பு இளைய  மக...

இங்க் பாட்டில் நினைவுகள்

Image
'தினமணி' நாளிதழில் சில நாள்களுக்கு முன்பு வெளியான (முனைவர் பா.சக்திவேல், "மனநிலை மாற வேண்டும்", 12.5.2026) கட்டுரையைப் படித்தபோது எனக்கு 1975-76இன் பள்ளிக்கால நினைவுகள் மனதிற்கு வந்தன.  நான் பள்ளியில் படித்தபோது பேனாவில் எழுதியதும், இங்க் வாங்கியதும் மறக்க முடியாத அனுபவங்கள் ஆகும். வீட்டின் அருகிலேயே இங்க் கடை வைத்திருப்பவரின் வீடு இருந்ததால் நானும், சகோதரிகளும் அங்கு தான் இங்க் வாங்க சொல்வோம். அவருடைய வீட்டை இங்க்காரர் வீடு எனக் கூறுவோம். எங்கள் மூர்த்தி அண்ணனின் நண்பரான ராமநாதன் அண்ணனும், அவரின் இரு தங்கைகளான பரமேஸ்வரி அக்காவும், பத்மா அக்காவும் அங்கு  இருப்பார்கள். அவர்கள் யாரிடமாவது இங்க் பாட்டிலைக் கொடுத்து 25 பைசாவுக்குக் கேட்போம்.  பாட்டிலில்  முழுவதுமாக இங்க் நிரப்பித் தருவார்கள்.  சிகப்பு இங்க் ஐந்து பைசா, பத்து பைசா விலை கூடுதலாக இருக்கும். நாங்கள்  கருப்பு, ஊதா, சிகப்பு என மூன்று கலரில் வாங்குவோம். நோட்டில் எழுதும்போது கோடு போடுவதற்கும், தலைப்புகளைத் தெளிவாக எடுத்துகாட்டுவதற்கும் வெவ்வேறு கலரைப் பயன்படுத்துவோம். சில்லரையில் நாங்கள் பாட்டில் கொடுத...