Posts

Showing posts from September, 2025

வாழ்த்துகள், சென்னை பேஷன் இன்ஸ்டிட்யூட்

Image
'ராணி' என்று நாங்கள் அழைக்கும் திருமதி ச, செல்வராணி சரவணன் (என் அண்ணன் திரு.  ராமமூர்த்தி-அண்ணி திருமதி. ரா.கண்மணியின் மகள்), தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று சென்னை பேஷன் இன்ஸ்டிட்யூட் (அலைபேசி 98848 61088) என்னும் நிறுவனத்தைக்  சுமார் 12 வருடங்களாக நடத்திவருகிறார்.  அதில் மகளிர்க்கான ஃபேஷன் டிசைனிங், டைலரிங், எம்பிராய்டரி, ஆரி ஒர்க்,  உல்லன் நூலில் துண்டு, நிலைத்திரை, குழந்தைகளுக்கான ஸ்வட்டர், தொப்பி, சாக்ஸ், பொம்மை, மண்ணாலான தோடு, ஜிமிக்கி, வளையல்,  சாக்லேட் தயாரிப்பு, பெயிண்டிங், போன்ற  பல  வகையான  கைத்தொழில்களை கற்றுத்தருகிறார். அத்துடன்  சுலபமாக மடிப்பு வைத்து புடவையை நேர்த்தியாக கட்டுவதற்கும் சொல்லித் தருகிறார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் கீழ் நடத்தப்படும் Vocational Diploma in Fashion Designing and Garment Making தேர்வில்  100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  பரீட்சை எழுதினர்.  இதில் முதல் மூன்று இடத்தை சென்னை ஃபேஷன் இன்ஸ்டிட்யூட்டில் பயின்ற மாணவிகள் 25.9.2025இல்  தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் நடத்திய ...

எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள் : விந்தன்

Image
1971இல் தினமணி கதிரில் நடிகவேள் எம்.ஆர்.இராதாவைப் பேட்டிக் கண்டு  அமரர் விந்தனால்  எழுதப்பட்ட தொடரின் நூல் வடிவம். கேள்விக்குப் பதில் சொல்லும் வகையில் இந்நூல் உள்ளது. அவரிடம் கேட்கும்  கேள்விக்கு  பதில்கள்   மனதில் தோன்றியதை கூறியிருக்கிறார். படிக்க சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும், அதற்கான பதில்களும் எனக்குப் பிடித்திருந்தது. அதில் சில.... ".....கலை உலகத்துக்கு நீங்கள் வந்தது எப்படி?.......கலை உலகத்துக்கு நானாகவும் போகவில்லை; அதுவாகவும் என்னைத் தேடி வரவில்லை. சூழ்நிலையும் சந்தர்ப்பமுமே என்னையும் கலையையும் ஒன்று சேர்த்தது.......வீட்டிலேயே சோறில்லை டிராமா கம்பெனியைத் தேடிக்கிட்டுப் போவேன். அப்போ அங்கேதான்  நல்ல சோறு கிடைக்கும்."  (பக்கம் 11)  "உண்மையான கலைஞன் எப்படிப்பட்டவனாக  இருக்கவேண்டும்?......... ஆடியன்ஸக்கு லஞ்சம் கொடுப்பவனாய் இருக்கக் கூடாது: அறிவைக் கொடுப்பவனாயிருக்கவேண்டும்....விளம்பரம் கலைஞனைத் தேடி வந்தது அந்தக் காலம் கலைஞன் விளம்பரத்தை தேடி ஒடறது இந்தக் காலம்." (ப.12)    "எலெக்ட்ரிஷினாக...

பாஸ்கர் அண்ணன்

Image
எனது பெரியப்பாவின் (திரு. தில்லையப்ப நாடார்-திருமதி. தி. மீனம்மாள் அவர்களின்) இளைய மகன் திரு பாஸ்கர்  அவர்கள் 31.8.2025 அன்று காலை சென்னையில் இயற்கை எய்தினார். அந்தச் செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். குடும்பத்தாருடன் சென்னை சென்று இறுதி அஞ்சலி செலுத்தினேன்.  புகைப்படம் நன்றி: பா.சங்கர் முகநூல் பக்கம் பாஸ்கர் அண்ணன், எங்கள் வீட்டில் ஒருவராக வளர்ந்தவர். பழகுவதற்கு இனிமையாகவும், எளிமையாகவும், பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பார். உழைப்பில் நேர்மை, விட்டுக்கொடுத்தல், பொய் கூறாமை ஆகிய நல்ல குணங்களை அவரிடம் நான் கண்டுள்ளேன். பணம் தொடர்பான விஷயத்தில் மிகவும் கவனமாகவும்  இருப்பார். மிகச்சிறந்த உழைப்பாளி. உற்றார் உறவினர்கள் மீதும், நண்பர்கள் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருப்பார். அவர், தஞ்சாவூரிலுள்ள தன்னுடைய சித்தாப்பாவின்  (என்னுடைய அப்பா) அலுமினியக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். சில ஆண்டுகள் கழித்து புதுக்கோட்டையில் உள்ள அலுமினிய ரோலிங் மில்லில் சேர்ந்து அங்குப் பணியாற்றினார். சில  வருடங்களுக்குப் பிறகு அவருடைய குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது...