சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை : பா.தீனதயாளன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அவருடைய திரைப்படங்கள், இயக்குனர்களைப் பற்றி 1952 முதல் 1999 வரை உள்ளவற்றை ஆசிரியர் பா. தீனதயாளன் இந்நூலில் அழகாகக் கூறியிருக்கிறார். அதிலிருந்து எனக்குப் பிடித்த சிலவற்றைப் பகிர்கிறேன். "முதன் முதலாக இசைத்தட்டாக தமிழில் வெளிவந்த முதல் திரைப்பட வசனங்கள் 'பராசக்தி' பட வசனங்களே. 1952ல் திரைக்கு வந்து அறிமுகமாகி முப்பது ஆண்டுகள் முடிந்த பின்னரும், 1982லும் சிவாஜி கணேசன்தான் மிக அதிக படத்தில் நடித்த ஒரே கதாநாயகன். 82ல் பதிமூன்று படங்களில் நடித்ததில் இரண்டு வெள்ளி விழாப்படங்கள். அவரது மகன் பிரபு அறிமுகமான ஆண்டும் அது தான்." (பக்கங்கள் 9, 10) "என்னை விட சிறந்த நடிகர் சிவாஜி கணேசன் என்று சேலத்தில் நடைபெற்ற 'நம் நாடு' என்ற தனது படத்தின் நூறாவது நாள் விழாவில் எம்,ஜி. ஆர். பாராட்டினார்." (பக்கம் 11) "பிற கலைஞர்களுக்கு சிவாஜி கணேசன் பலமாக இருந்திருக்கிறார். (பக்கம் 12) "வீட்டின் வறுமையைப் போக்க சம்பாதிக்கும் ஆசையும் நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்கும் ஆசையும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் என்பது போல் ...