Posts

Showing posts from August, 2025

பாவை விளக்கு : அகிலன்

Image
அகிலன் எழுதிய பாவை விளக்கு நூலினைப் படித்தேன். அவர் நான்கு பெண்களை மையமாக வைத்து இந்நாவலை எமுதியிருக்கிறார். கதையின் நாயகன் தணிகாசலம். நாயகன்மீது ஆசைப்படும் வயதில் மூத்தவளான தேவகி, நாயகன் ஆசைப்படும் நாட்டியக்கலைஞர் செங்கமலம், நாயகனுக்கு மனைவியாகும் அத்தை மகள் கௌரி, அவனுடைய எழுத்துக்குத் துணை நிற்கும் உமா ஆகிய நான்கு பெண் பாத்திரங்கள். இந்நால்வரையும் நூலசிரியர் குறைவில்லாமல்  வடிவமைத்திருப்பார். நிறைவாக இரண்டாவது மனைவியாக, உமாவை திருமணம் செய்துகொள்வார் கதாநாயகன்.   படிப்பதற்கு எளிமையாகவும், வாக்கிய அமைப்புகள் புரியும்படியாகவும் உள்ளன. இது, திரு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்து அதே பெயரில் திரைப்படமாக வெளியானது. நூலைப் படித்து முடித்ததும் தொலைக்காட்சியில் திரைப்படத்தைப் பார்த்தது நினைவிற்கு வந்தது. நூலின் சில பகுதிகள் என் மனதில் பதிந்தன. அவற்றைக் காண்போம்.   "தூய வாழ்க்கை என்றால் பெண்களின் நினைவில்லாத  வாழ்க்கை   "பணம் வாழ்க்கையில் மிகமிக முக்கியமான சாதனந்தான்......பணமில்லாத வாழ்க்கை எவ்வளவு கேவலமான வாழ்க்கை..." (பக்கம்.7...